உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மலையாங்குளம் கிராமத்தில் உள்ள பெரியாயி உடனுறை ஸ்ரீ பெரியாண்டவர் கோயிலில் புனரமைப்பு பணி சமீபத்தில் முடிவடைந்தது. இதையொட்டி நேற்று காலை கோயிலில் மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தில் வாஸ்து ஹோமம், சாந்தி ஹோமம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனை ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.நேற்று காலை 3ம் கால யாகசாலை பூஜை முடிந்தபின்னர் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.