மும்பை: மது குடிக்க பணம் கேட்டு தராததால் தனது 25 ஆண்டு கால லிவ்-இன் பெண் மீது ஆசிட் வீசிய 62 வயது முதியவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த மகேஷ் பூஜாரி (62) என்பவரும், கீதா விர்கர் (54) என்பவரும் கடந்த 25 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல், ‘லிவ்-இன்’ ஜோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்களில் கீதா விர்கருக்கு திருமணமாகி முதல் கணவர் மூலம் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மது பழக்கத்திற்கு ஆளாகி இருந்த மகேஷ் பூஜாரி, தனது லிவ்-இன் ஜோடியான கீதா விர்கரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், கீதா விர்கரை சரமாரியாக தாக்கினார். இவ்வாறாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து சென்ற நிலையில், கடந்த 13ம் தேதி வீட்டில் இருந்த கீதா விர்கரின் மீது மகேஷ் பூஜாரி ஆசிட் வீசினார்.