ஓசூர்: கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டம் கங்கிலிபுறா பகுதியை சேர்ந்தவர் கலிமுல்லா. இவரது மகன் சல்மான்கான் (23). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, உறவினரின் 17 வயது மகளை சல்மான்கான் காதலித்துள்ளார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதை அறிந்த சல்மான்கான் சிறுமி தன்னை காதலிக்கும்போது எடுத்த புகைப்படத்தை அனுப்பி திருமணத்தை நிறுத்தினார். மீண்டும் சிறுமிக்கு நடந்த திருமண ஏற்பாடுகளை நிறுத்த சல்மான்கான் முயற்சி செய்ததால், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் சல்மான்கானை எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில், கடந்த மாதம் 10ம் தேதி சல்மான்கான் மாயமானார். இதுதொடர்பாக அவரது தாய் ஹாதாஜ் பானு, கடந்த 26ம் தேதி ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சல்மான்கானை தேடி வந்தனர்.