துரைப்பாக்கம்: சென்னை கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், ராஜீவ்காந்தி சாலையில் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள வங்கி கணக்கில் கடந்த 2021ம் ஆண்டு, மே மாதம் 5ம் தேதி ரூ.45 லட்சத்தை நிரந்தர வைப்பு நிதியில் டெபாசிட் செய்துள்ளார். அப்போது வங்கி பொறுப்பில் இருந்த உதவி மேலாளர் அப்சனா (45) என்பவர், முதியவருக்கு ரூ.45 லட்சம் டெபாசிட் செய்ததற்கான ரசீதை கொடுத்துள்ளார். பின்னர் தனது செல்போன் எண்ணையும் முதியவரிடம் அளித்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக முதியவர், அந்த வங்கி உதவி மேலாளரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதில் சந்தேகமான முதியவர், கடந்த மாதம் 24ம் தேதி வங்கிக்கு நேரில் சென்று விசாரித்துள்ளார். அங்கிருந்த வங்கி மேலாளர் முரளி, கடந்த 2022ம் ஆண்டு, ஜனவரி மாதமே முன்னாள் உதவி மேலாளர் அப்சனா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்றுவிட்டதாக முதியவருக்கு தெரியவந்தது.