தனியார் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி மர்மச்சாவு: புழல் பகுதியில் பரபரப்பு

புழல்; புழல் பகுதியில் தனியார் கல்லூரி விடுதியில்  நர்சிங்  மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புழல் சிதம்பரம்நகர் அம்பத்தூர் சாலையில் தனியார்  பெண்கள் நர்சிங் கல்லூரில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை  சேர்ந்த சுபஸ்ரீ (20) என்பவர் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார்.  இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் தூங்கிய சுபஸ்ரீ , வெகுநேரம் ஆகியும்  எழுந்தாததால் சந்தேகமடைந்த  சக மாணவிகள்  அவரை எழுப்பியுள்ளனர்.

அப்போது அவரது உடல்  வேர்த்துகொட்டியதாக கூறப்படுகிறது.  இதனால் அதிர்ச்சியடைந்த  மாணவிகள், உடனே சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து  சென்றனர். அங்கு சுபஸ்ரீ யை பரிசோதனை செய்த டாக்டர்கள்,  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புழல் போலீசார்  நர்சிங் கல்லூரி விடுதிக்கு வந்து விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சிங் மாணவியின் மர்மச்சாவு குறித்து விசாரித்து வருகின்றனர். 

Related Stories: