புழல்; புழல் பகுதியில் தனியார் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புழல் சிதம்பரம்நகர் அம்பத்தூர் சாலையில் தனியார் பெண்கள் நர்சிங் கல்லூரில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கி 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இதுபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ (20) என்பவர் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை விடுதி அறையில் தூங்கிய சுபஸ்ரீ , வெகுநேரம் ஆகியும் எழுந்தாததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் அவரை எழுப்பியுள்ளனர்.