சென்னை: கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பட்டியலின ஆணைய உத்தரவை எதிர்த்து கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என அறநிலையத்துறைக்கு அளித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.