மின்சார ரயிலில் சிக்கியதால் சிறப்பு உதவி ஆய்வாளர் இடது கால் துண்டிப்பு

தண்டையார்பேட்டை, : பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலில் சிக்கியதால் சிறப்பு உதவி ஆய்வாளரின் இடது கால் துண்டிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் கேசவன் (55). இவர், ராயபுரத்தில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும்போது, மின்சார ரயிலில் மாட்டி, அவரது இடது கால் துண்டானது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சிறப்பு உதவி ஆய்வாளரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இதுகுறித்து சென்ட்ரல் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து பிரிவிலிருந்து சட்டம்- ஒழுங்கிற்கு கேசவன் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ரத்து செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில், விபத்தில் சிக்கி காலை இழந்துள்ளார். இது, போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Related Stories: