சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்றத்திற்கான மாற்றம் ஈரோடு கிழக்கிலிருந்து ஆரம்பம்’ என்று கூறியுள்ளார்.