மும்பை: பலாத்கார வழக்கில் சிக்கிய ஆடிட்டர் ஒருவர், அவரது நண்பரின் ரிசார்ட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர் சிராக் வாரியா (45) என்பவர், நாசிக் மாவட்டம் இகத்புரியில் உள்ள தனது நண்பரின் ரிசார்ட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த போலீசார் சிராக் வாரியாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘தற்ெகாலை செய்து கொண்ட ஆடிட்டர் சிராக் வாரியாவின் அறையில், தற்கொலை குறிப்பு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில், தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து சிராக்கின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளோம்.