சென்னை: சென்னை மெரினா கடற்கரைகளில் கடலோர காவல்படையினர் கடலில் மூழ்கியவரை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டு தோறும் பிப்ரவரி 1ம் தேதி இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைகளில் பொதுமக்கள் முன்னிலையில் கடலில் மூழ்கியவரை மீட்பதை குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அலைகளால் இழுத்து செல்லப்பட்டவர்களை மீட்பது, ரோந்து பணியின் போது குற்றச் சம்பவங்களை தடுப்பது போன்றவைகளை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.