தரங்கம்பாடியில் மீனவ பிரதிநிதிகள் ஆலோசனை: தொழில் மறியல் போராட்டம்

தரங்கம்பாடி: தமிழ்நாடு அரசு சுருக்குமடி வலையை அனுமதிக்கும் சூழல் உருவானால் தொழில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று 11 மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு நிபந்தனைகளுடன் வாரத்தில் இரண்டு நாள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி 12 மயிலுக்கு அப்பால் மீன்பிடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்துள்ளது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைமை கிராமமான தரங்கபாடியில் சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்துவதை குறித்து 11 மாவட்ட மீனவ பஞ்சாயத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுருக்குமடி வலை இரட்டை மடி, அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகு ஆகியவற்றை நிரந்தரமாக தடை செய்ய பலரும் அரசை வலியுறுத்தியுள்ளன.

தரங்கம்பாடியில் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் சுருக்குமடி வலையை அனுமதிக்கும் சூழ்நிலை வருமானால் 11 மாவட்ட மீனவ கிராமங்களும் தொழில் மறியல் செய்வது என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.     

Related Stories: