டெல்லி: நாளை, நாளை மறுநாள் இலங்கை, தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பிப்.3, 4ல் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.