கரூரில் முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் அணி ஆதரவாளருமான கு.ப.கிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: கையிலே வெண்ணையை வைத்துக்கொண்டு தொன்னைக்கு அலைவது போல இபிஎஸ், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு தொன்னைக்காக அலைந்து கொண்டிருக்கிறார். நீங்கள் யாரை வேட்பாளராக வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். யாருக்கு இரட்டை இலை சின்னம் தரவேண்டும் என சொல்கிறீர்களோ ஓபிஎஸ், அதற்காக கையெழுத்து போட்டுத் தருவார். ஓபிஎஸ்சின் கையெழுத்தே வேண்டாம், இந்த கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி நல்ல பாடத்தை கற்றுத்தரும்.