சென்னை: ரூ.7,986 கோடி வரி செலுத்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸுக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதிப்புக் கூட்டு செலுத்தியதற்கு வருமானவரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என டாஸ்மாக் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டுக்கு ரூ.7,986 கோடி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த மனு எற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு செய்தது.