சென்னை: சென்னையில் கஞ்சா விற்ற இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை மாதவரம் அருகே கல்லூரி அருகே ஆட்டோ ஒன்றில் கஞ்சா விற்கப்படுவதாக போதை பொருள் தடுப்பு புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவர்கள் சோதனை மேற்கொண்டதில் தேனியை சேர்ந்த கோட்டைசாமி, சென்னையை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் சேர்ந்து 40 கிலோ கஞ்சா விற்பனை செய்ததை காவல்துறை கண்டுபிடித்தார்கள். இந்நிலையில், கஞ்சா விற்றதாக தேனியை சேர்ந்த கோட்டைசாமி, சென்னையை சேர்ந்த உதயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.