சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுவரை 2.42 கோடி மின் நுகர்வோர், ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பொதுமக்கள் கடைசிநாள் வரை காத்திருக்காமல் உடனடியாக மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.