திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இருந்து 400 ஆண்டுகள் பாரம்பரிய நகரத்தார்கள் சர்க்கரை காவடி எடுத்து பழனி முருகன் கோவிலை நோக்கி பாதயாத்திரை தொடங்கியுள்ளனர். நெற்குப்பை, கண்டனூர், காரைக்குடி அரண்மனை பொங்கல் உள்ளிட்ட நகரத்தார்கள் கடந்த 400 ஆண்டுகளாக பாரம்பரிய மிக்க வைரவேல் சர்க்கரை காவடிகளுடன் 19 நாட்கள் பாதயாத்திரையாக பழனி சென்று முருகனை தரிசிப்பது வழக்கம். அதன்படி பழமை மாறாமல் சர்க்கரை காவடி எடுத்து நகரத்தார்கள் நடந்தே பழனிக்கு பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.