ஈரோடு: ஈரோட்டில் நடைபெற்ற ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் விதவிதமான ஆடைகள் அணிந்து மாடல்கள் ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. ஈரோடு கங்காபுரத்தில் உள்ள டெக்ஸ்வேலி ஜவுளி மையத்தில் தென்னிந்திய அளவிலான ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.