சென்னை: பிப்.1, 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திரிகோணமலைக்கு 380 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.