கடலில் குதித்து மூதாட்டி தற்கொலை

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் புதிய வார்ப்பு பகுதியில் நேற்று மாலை மூதாட்டி ஒருவர் திடீரென கடலில் குதித்து தத்தளித்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசருக்கு தகவல் கொடுத்தனர். மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மூதாட்டி கடலில் மூழ்கி இருந்தார். அதைத் தொடர்ந்து ராயபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் தீயணைப்பு வீரர்கள் கடலில் இறங்கி  உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில்,  ராயபுரம் தர்கா காலனி ஷேக் மேஸ்திரி தெருவை சேர்ந்த சபீராபிவி (60). மனநலம் பாதிக்கப்படவர் என்பது தெரியவந்தது. எதற்காக கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: