பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பில் 46 பேர் பலியாகினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 46 பேர் பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்துள்ளதால் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.