கோவை ஈச்சனாரியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஸ்ட்ராங்கான வேட்பாளர் நிற்க வேண்டும். பாஜவிற்கான தேர்தல் இது அல்ல. எங்களுக்கான தேர்தல் 2024தான். பிபிசி ஆவணப்படம் யார் வேண்டுமானாலும் போடட்டும். அது பொய் செய்தி. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் முழுக்க பொய் என தெரிவித்துள்ளனர். வேலையில்லாத நான்கு பேர் ஸ்கிரீனை போட்டு மக்களுக்கு காட்டுகிறார்கள். அந்த வீடியோவை பார்த்த பின்பு மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை வரும். குறை சொன்னவர்கள் எல்லாம் ஜெயிலில் உள்ளனர். தயவு செய்து திரையிடுங்கள். தியேட்டரில் போடுங்கள். இது பிரபகண்டா மெட்டீரியல். பிபிசி இந்திய திருநாட்டை களங்கப்படுத்துகிறது. பார்க்க மக்கள் இல்லை. நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும்.