ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் முதல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, மாநகராட்சி மைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுக்களை பெற்று சென்றனர். வேட்பு மனு தாக்கல் இன்று (31ம் தேதி) துவங்க உள்ளதையொட்டி, வேட்பு மனுக்களை பெற்று செல்ல வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிகளவில் திரண்டனர். இதற்காக வேட்பு மனுக்கள் வழங்கும் இடத்தில் இருக்கைகள் போடப்பட்டு, முதலில் வந்தவர்கள் அடிப்படையில் வரிசையாக வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் 13 பேரும், நேற்று 35 பேரும் வேட்பு மனுக்களை பெற்று சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.