பாட்னா: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்காது. பாஜவுடன் கைகோர்ப்பதைவிட நான் செத்துவிடலாம் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜவுடன் நிதிஷ்குமார் கூட்டணி வைக்கக்கூடும் என்று தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் மக்களவை தேர்தலில் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்று ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் நிருபர்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.