புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளில் மிக அதிகமாக 165 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடுங்குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படுகிறது. சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட நீதிமன்றங்களே தூக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் படைத்தவை என்பதால், தூக்கு தண்டனை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டில் மட்டும் 165 குற்றவாளிளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டில், 146 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அதிகமாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.