காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது: எல்ஐசி விளக்கம்

சென்னை: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு உட்பட்டே அதானி குழுமத்தில் முதலீடுகள் செய்யப்பட்டதாக எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள எல்ஐசிக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என சர்ச்சை எழுந்தது. அதானி குழும பங்குகளின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், எல்ஐசி நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. அதன்படி, வெவ்வேறு காலகட்டங்களில் அதானி குழும நிறுவனங்களில் மொத்தமாக தாங்கள் செய்துள்ள முதலீடு ரூ.36,474 கோடி ஆகும்.

ஜனவரி 27 நிலவரப்படி அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளின் மதிப்பு ரூ.56,142 கோடியாக இருந்தது. எல்ஐசி நிர்வகிக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.41.66 லட்சம் கோடியாகும். அதானி குழுமத்தில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் உரிய தர மதிப்பீடுகள் கொண்டதாகும். காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்படி அதானியில் முதலீடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவி வருவதால் முதலீடுகள் தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்வதாக எல்ஐசி விளக்கம் அளித்திருக்கிறது.

Related Stories: