திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வட மாநிலத்தவர்கள் தாக்குவதற்காக துரத்திய வீடியோ வைரலான விவகாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீகாரை சேர்ந்த் ரஜட்குமார், பரேஷ்ராம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.