கோபி : கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொடிவேரி அணை பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடத்தூர் போலீசருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி மற்றும் போலீசார் அங்கு வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது கொடிவேரி அணைப்பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் விரட்டிச்சென்று பிடித்தனர்.