ஐதராபாத்: தெலங்கானாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய பாஜ அரசு நடத்துகிறது என பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் கே.டி.ராமராவ் குற்றம்சாட்டினார். நிசாமாபாத்தில் அவர் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “ஒன்றிய பாஜ அரசு தெலங்கானாவுக்கு எந்த புதிய திட்டங்களையும், நிதிஉதவியையும் அறிவிக்கவில்லை. ஆந்திரபிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.