திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏவில், பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைப்பெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாதவரம் ஸ்ட்ரீட் விஷன் தொண்டு நிறுவனம் சார்பில், நேற்று முன்தினம் மாத்தூர், எம்எம்டிஏ பகுதியில் பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது எப்படி என்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவனத் தலைவர் சீதாதேவி தலைமை தாங்கினார்.