லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாகப் பந்துவீசி அசத்தியது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் மட்டுமே எடுத்தது. தொடக்க வீரர்கள் ஆலன், கான்வே தலா 11 ரன், சாப்மேன், பிரேஸ்வெல் தலா 14 ரன் எடுத்தனர்.