சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது. வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது, மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்த பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கு வந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.