ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாரதி நகர் காட்டன் பஜார் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் தான் பணிபுரியும் நிறுவனத்தில் ராணிப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அப்போது, சுந்தர்ராஜ் மற்றும் சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதாம். சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே, கடந்த 13ம்தேதி சுந்தர்ராஜ் ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.