நெல்லை: சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்து செயலரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி யூனியன், தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் தனது வீட்டு சொத்துவரியில் பெயர் மாற்றம் செய்ய தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து செயலரான அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் (51) என்பவரிடம் முறைப்படி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரோ வீட்டு சொத்துவரியில் பெயர் மாற்றம் செய்ய ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.