தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது: ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: தமிழ்நாட்டில் போதைப்பொருளை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது என ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான சுற்றறிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருவதாக நீதிபதி தெரிவித்தார். கஞ்சா விற்ற வழக்குகளில் ஜாமின் கோரிய மனுக்களை விசாரித்தபோது ஐகோர்ட் கிளை நீதிபதி புகழேந்தி தமிழ்நாடு அரசை பாராட்டினார்.

போதைப்பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம் என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்ய கஞ்சாவை பாதுகாப்பதற்கான அறைகள் சென்னை, திருச்சி, மதுரை, தேனி, கோவையில் அமைக்கப்பட்டுள்ளன. அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு சாவி முறை பின்பற்றப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: