சென்னை: கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட விருகம்பாக்கம் மயானபூமியின் தகன மேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் ஏ.வி.எம். அல்லது நெசப்பாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-128, விருகம்பாக்கம் மயானபூமியில் மின்சார தகனமேடையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 10ம் தேதி வரை மயானபூமியில் மின்சார தகனமேடை இயங்காது.