தாம்பரம்: சர்வோதய இயக்கத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் நாராயணன் சீடரும், குரோம்பேட்டை சர்வோதய பள்ளி நிறுவனருமான நாகலட்சுமி (98) நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். இவர், சிறுவயதில் நாக்பூர் அருகில் உள்ள காந்தியின் வார்தா சேவாகிராம் ஆசிரமத்தில் தங்கி இருந்து சேவை புரிந்துள்ளார். குரோம்பேட்டையில் 1957ம் ஆண்டில் இவர் தொடங்கிய சர்வோதய பள்ளியை ஜெயபிரகாஷ் நாராயணன் திறந்து வைத்தார். இவரது பள்ளியில் காயிதே மில்லத் பேரன் தாவூத் மியாகான், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் கோ.காமராஜ் உள்ளிட்டோர் பயின்றுள்ளனர்.