தண்டையார்பேட்டை: காசிமேடு பகுதியில் காஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 வலிபர்களை போலீசார் கைது செய்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்தின்பேரில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து, விசாரணை செய்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், போலீசார் அவர்களை சோதனையிட்டபோது, 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.