புதுடெல்லி: பிரதமர் மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்தை திரையிட ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி இதனை திரையிட முயன்ற ஜேஎன்யூ மற்றும் ஜமியா பல்கலை. மாணவர்கள் நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த ஆவணப்படத்தை நேற்று டெல்லி பல்கலை.யின் கலைத்துறை மாணவர்கள் திரையிட முயன்றனர்.