திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள பிரமாடம் பகுதியைச் சேர்ந்தவர் பினு (26). கடந்த 2020ம் ஆண்டு இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை மிட்டாய் தருவதாக கூறி தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாலிபர் பினுவுக்கு 100 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. பலாத்கார வழக்கில் போக்சோ நீதிமன்றம் 100 ஆண்டு தண்டனை விதிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.