ராஞ்சி: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக 3 டி.20 போட்டிகளில் மோதுகின்றன. இதில் முதல் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது. ராஞ்சியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.