டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆவண படத்தின் இரண்டாம் பாகம் அண்மையில் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தடையை மீறி பிபிசியின் ஆவணப்படத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யூ) திரையிட மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்தது. தடையை மீறி திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.