திருப்பூர்: வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளிக்கபப்ட்டுள்ளது. திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகரில் தமிழ் தொழிலாளர்களை வட வட மாநில தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் துரத்திச் சென்று தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் வட மாநில தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.