ஆலந்தூர்: சென்னை அருகே உள்ளகரத்தில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் நியூ பிரின்ஸ் பவானி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளரும், பள்ளி முதல்வருமான மகாலட்சுமி, துணை தலைவர்கள் எல்.நவீன்பிரசாத், எல்.அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மேட்டில்டா மார்க், நியூ பிரின்ஸ் பவானி சீனியர் செகண்டரி பள்ளி தலைமை ஆசிரியர் வீணா இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.