ஈரோடு: ‘தேர்தல் வேலையை நாங்கள் ஆரம்பித்து விட்டோம், அதிமுக ரகசிய கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை’’ என அமைச்சர் கே.என்.நேரு கூறினார். ஈரோட்டில் தி.மு.க.கூட்டணி கட்சியின் தேர்தல் பணி மனை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது; திமுக கூட்டணி கட்சிகள் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் திமுகவின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் உறுதியளித்துள்ளனர்.