ஜெனின்: மேற்கு கரையில் இஸ்ரேல் நாட்டின் ராணுவம் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன போராளிகளின் ஆதிக்கத்தில் உள்ள மேற்கு கரை ஜெனின் நகரத்தை முற்றுகையிட்டு இஸ்ரேல் படையினர் திடீரென துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டனர். பாலஸ்தீன போராளிகளும் இஸ்ரேல் ராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இருதரப்பு மோதலில் 60 வயது மூதாட்டி உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.