ஆலந்தூர்: மூவரசம்பட்டு ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நேற்று நடைபெற்றது. தலைவர் ஜி.கே.ரவி தலைமை வகித்தார். துணை தலைவர் எம்பி.பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூடத்தில், ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட சாலை பணி, மழைநீர் கால்வாய் பணி, தெரு விளக்கு பணி போன்றவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட நலச்சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் தடையின்றி குடிநீர் வழங்கும்படியும், குப்பைகளை சேரவிடாமல் உடனுக்குடன் அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.