ஈரோட்டில் தி.மு.க.கூட்டணி கட்சியின் தேர்தல் பணி மனை திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: திமுக கூட்டணி கட்சிகள் எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினை விட்டு கொடுத்தது கிடையாது. கூட்டணி கட்சிகள் திமுகவின் முழு ஒத்துழைப்போடு பணியாற்றி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் உறுதியளித்துள்ளனர். இதனால், இந்த தேர்தலில் திமுக வெற்றியடையும் என முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.