திருப்பூர்: திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களும் வந்து திருப்பூரில் அறை எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் திலகர் நகர் மேற்கு பகுதியில் தெரு முழுவதும் வடமாநிலத்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகி உள்ளது. அதில், திருப்பூர் திலகர் நகர் மேற்கு பகுதியில் சென்ற தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் துரத்தி துரத்தி தாக்குதல் நடத்துகின்றனர். தாக்குதலில்போது வடமாநிலத்தவர்கள் கல், பெல்ட், கட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு விரட்டி, விரட்டி அடிக்கின்றனர்.