17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாபேட்டையை சேர்ந்தவர் வாழ்முனி மகன் தீபன்(20). மீனவரான இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 25.5.2020ல் தீபன் அந்த சிறுமியை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்று அங்குள்ள ஒரு முந்திரி தோப்பில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தீபன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், தீபன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தீபனுக்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்திலிருந்து ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார்.  இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா செல்வி ஆஜராகி வாதாடினார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீபன்  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: