கடலூர்: கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாபேட்டையை சேர்ந்தவர் வாழ்முனி மகன் தீபன்(20). மீனவரான இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 25.5.2020ல் தீபன் அந்த சிறுமியை அவரது வீட்டில் இருந்து கடத்திச் சென்று அங்குள்ள ஒரு முந்திரி தோப்பில் வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து சிறுமியின் பெற்றோர், கடலூர் துறைமுகம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் தீபன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும் கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.